Dec 2, 2025
Thisaigal NewsYouTube
திருடனைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸ்காரர் காயமுற்றார்
தற்போதைய செய்திகள்

திருடனைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸ்காரர் காயமுற்றார்

Share:

கிள்ளான், நவம்பர்.13-

கிள்ளான், பெர்சியாரான் ராஜா மூடா மூசாவில் ஓர் எண்ணெய் நிலையத்தில் கொள்ளையடித்த சந்தேகப் பேர்வழியைக் கைது செய்யும் முயற்சியில் போலீஸ்காரர் ஒருவர் காயமுற்றார் என்று தென்கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரம்லி காசா தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் போது ஏற்கனவே சுபாங் ஜெயாவில் உள்ள ஓர் எண்ணெய் நிலையத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருந்த ஒரு காரை போலீசார் தேடி வந்தனர்.

அந்தக் கார், கிள்ளானில் உள்ள ஓர் எண்ணெய் நிலையத்தில் நிற்பதைக் கண்ட ரோந்துப் போலீசார், அந்த காரில் இருந்த நபரைக் கைது செய்யும் முயற்சியின் போது, போலீஸ்காரர் ஒருவரைச் சந்தேகப் பேர்வழி மூர்க்கமாகக் கீழே தள்ளி விட்டு தப்பிக்க முற்பட்டுள்ளார்.

காரை மின்னல் வேகத்தில் செலுத்திய அந்த நபர், கீழே விழுந்து கிடந்த போலீஸ்காரரின் காலை உரசிய வண்ணம் மோதி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஏசிபி ரம்லி காசா குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு இன்று வந்த தகவலைப் போல கிள்ளானில் நடந்தது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அல்ல. மாறாக, சந்தேகப் பேர்வழி, போலீஸ்காரரை மோதி விட்டுத் தப்பிச் செல்லும் சம்பவம் தொடர்புடைய காணொளியாகும் என்று ரம்லி காசா விளக்கம் அளித்தார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்