Dec 5, 2025
Thisaigal NewsYouTube
அனைத்துலக தரத்திலான 10 பேருந்துகள் சேவையைத் தொடங்கின
தற்போதைய செய்திகள்

அனைத்துலக தரத்திலான 10 பேருந்துகள் சேவையைத் தொடங்கின

Share:

பத்துகேவ்ஸ், ஜூலை.14-

அனைத்துலக தரத்திலான 10 புதிய டீசல் ரெபிட் பேருந்துகள் இன்று அதிகாரப்பூர்வமாகச் சேவையைத் தொடங்கின.

இவ்வாண்டு ஜுலை மாதம் தொடங்கி, 2026 ஆம் ஆண்டு முதலாவது காலாண்டில் கட்டம் கட்டமாக தருவிக்கப்படவிருக்கின்ற ஈரோ 5 ரகத்திலான 310 ரெபிட் பேருந்துகளில் முதல் கட்டமாக 10 பேருந்துகள் பெறப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

நாட்டின் பொதுப் போக்குவரத்துத்க் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் ஒரு பகுதியாக இது திகழ்கிறது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் மாசுப்பாட்டைக் கட்டுப்படுத்த வல்ல அனைத்துலக தரத்திலான இந்த பேருந்துகள் ஈரோ 5 தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும்.

ஈரோ 5 தொழில்நுட்பம் என்பது கார்பன் டியொக்சைட் வெளியீட்டை 0.4 விழுக்காடாகக் குறைக்க வல்லதாகும். நைட்ரோஜன் ஒக்சிடா வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கக்கூடியதாகும் என்று அந்தோணி லோக் விளக்கினார்.

இன்று பத்துகேவ்ஸில் உள்ள ரெபிட் பேருந்து வளாக டிப்போவில் புதிய ரக டீசல் ரெபிட் பேருந்துகளின் சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து செய்தியார்களிடம் பேசுகையில் அந்தோணி லோக் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்