லோரி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். இச்சம்பவம், நேற்று இரவு 9.35 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 71.6 ஆவது கிலோ மீட்டரில் ஜோகூர், குளுவாங்கிற்கு அருகில் நிகழ்ந்தது. 54 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர், ஜோகூரிலிருந்து கோலாலம்பூரை நோக்கி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரின் முஹமாட் நோ தெரிவித்தார். தலையிலும், உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளாகிய அந்த ஓட்டுநர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக பஹ்ரின்ம முகமட் நோ குறிப்பிட்டார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


