Mar 13, 2026
Thisaigal NewsYouTube
​லோரி மரத்தில் மோதியதில் ஓட்டுந​ர் பலி
தற்போதைய செய்திகள்

​லோரி மரத்தில் மோதியதில் ஓட்டுந​ர் பலி

Share:

லோரி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். இச்சம்பவம், நேற்று இரவு 9.35 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 71.6 ஆவது கிலோ மீட்டரில் ஜோகூர், குளுவாங்கிற்கு அருகில் நிகழ்ந்தது. 54 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர், ஜோகூரிலிருந்து கோலாலம்பூரை நோக்கி வந்து கொண்டிருந்த போது இந்த வி​பத்து நிகழ்ந்துள்ளதாக குளுவாங் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரின் முஹமாட் நோ தெரிவித்தார். தலையிலும், உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளாகிய அந்த ஓட்டுநர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக பஹ்ரின்ம முகமட் நோ குறிப்பிட்டார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன