Mar 11, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுப்பட்ட ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுப்பட்ட ஆடவர் கைது

Share:

நெகிரி செம்பிலான், கோலப்பிலாவில் உள்ள நகைக்கடை ஒன்றில் தங்க ஆபரணங்களை ஒப்படைக்க வந்த இரு விநியோகிப்பாளர்களை ஆயுதமுனையில் மடக்கி, 18 லட்சம் வெள்ளி தங்க ஆபரணங்களைப் பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் தப்பிச் சென்ற இரு முகமூடிக் கொள்ளையர்களில் ஒருவர், நேற்றிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில், கோலப்பிலா வட்டாரத்தில் 50 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், கைதுசெய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் துணை தலைவர் ஷாருல் அனுவார் அப்துல் வஹாப் தெரிவித்தார்.

அந்தச் சந்தேக பேர்வழி இன்று தொடங்கி 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படுவார் என்று ஷாருல் அனுவார் குறிப்பிட்டார்.

இக்கொள்ளைச் சம்பவம் நேற்று புதன்கிழமை காலை 11 மணியளவில், கோலப்பிலாவில் உள்ள நகைக்கடை ஒன்றில், சம்பந்தப்பட்ட நகைக்கடையின் பணியாளர்கள் வாடிக்கையாளர்களுடன் சேவையில் ஈடுபட்டிருந்த வேளையில் நிகழ்ந்தது.

நகைக்கடைசியின் பின்புறம், அந்த தங்க ஆபரணங்களை இறக்குவதற்கு ஏதுவாக இரு விநியோகிப்பாளர்கள், தங்கள் காரை நிறுத்திய போது, அவ்விடத்தில் ஏற்கனவே பதுங்கியிருந்த இரு முகமூடி கொள்ளையர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு