Mar 27, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல், மலேசியப் பிரஜை சிங்கப்பூரில் கைது
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல், மலேசியப் பிரஜை சிங்கப்பூரில் கைது

Share:

சிங்கப்பூர், ஜூன்.17-

சிங்கப்பூருக்குள் ஒரு லட்சத்து 73 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான 1.4 கிலோ ஹேரோயின் போதைப்பொருளைக் கடத்தியதாக நம்பப்படும் 30 வயது மலேசியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த மலேசியப் பிரஜை, கடந்த சனிக்கிழமை சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி மையம் மற்றும் போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என்று சிங்கப்பூர் அமலாக்கத்துறையினர் இன்று அறிவித்துள்ளனர்.

அந்த ஆடவர் பயணித்த மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட கார், சிங்கப்பூர் வூட்லென்ஸ் சோதனைச் சாவடி மையத்தில் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது காரின் பின்புறம், ஒரு கையுறைக்குள் அந்தப் போதைப்பொருளை அவர் மறைத்து வைத்திருந்ததாக அமலாக்கத் தரப்பினர் தெரிவித்தனர்.

அந்த நபர் கைது செய்யப்பட்டதுடன் காரும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை