வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி வியாழக்கிழமை, காலை 11.04 மணிக்கு சூரியக் கிரகணம் ஆரம்பமாகி மதியம் 12.45 மணிக்கு முடிவுறும் என்பதால், கோலாலம்பூர், ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் கீழ் உள்ள மூன்று கோயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் மூடப்படும் என்று தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ டத்தோ ஆர். நடராஜா தெரிவித்துள்ளார்.
தேவஸ்தானத்தின் கீழ் உள்ள கோலாலம்பூர், ஜாலான் புடு, கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் கோயில், கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் மற்றும் பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயில் ஆகிய மூன்று கோயில்களில் ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மாலை 5 மணிக்கு வழக்கம் போல் ஆலயங்களின் நடை திறக்கப்பட்டு, அபிஷேகங்கள் மற்றும் பூசைகள் நடைபெறும் என்று டான் ஶ்ரீ நடராஜா அறிவித்துள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


