வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி வியாழக்கிழமை, காலை 11.04 மணிக்கு சூரியக் கிரகணம் ஆரம்பமாகி மதியம் 12.45 மணிக்கு முடிவுறும் என்பதால், கோலாலம்பூர், ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் கீழ் உள்ள மூன்று கோயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் மூடப்படும் என்று தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ டத்தோ ஆர். நடராஜா தெரிவித்துள்ளார்.
தேவஸ்தானத்தின் கீழ் உள்ள கோலாலம்பூர், ஜாலான் புடு, கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் கோயில், கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் மற்றும் பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயில் ஆகிய மூன்று கோயில்களில் ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மாலை 5 மணிக்கு வழக்கம் போல் ஆலயங்களின் நடை திறக்கப்பட்டு, அபிஷேகங்கள் மற்றும் பூசைகள் நடைபெறும் என்று டான் ஶ்ரீ நடராஜா அறிவித்துள்ளார்.

Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு


