ஆடவர் ஒருவரைக் கொலை செய்ததாக இழுவை லோரி ஓட்டுநர் ஒருவர் இன்று போர்ட்டிக்சன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். 40 வயதுடைய சின் பூ கியோங் என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் வி. வனித்தா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட இழுவை லோரி ஓட்டுநர், கடந்த மார்ச் முதல் தேதி இரவு 7.30 மணியளவில் போர்ட்டிக்சன், லுக்குட்டில் உள்ள ஒரு ஸ்டால் கடையில் 38 வயது சியோக் தெக் மெங் என்பவரை கொலை செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த நபரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு


