Jul 2, 2026
Thisaigal NewsYouTube
இருவரைக் கொலை செய்ய முயற்சி: மூவர் கைது
தற்போதைய செய்திகள்

இருவரைக் கொலை செய்ய முயற்சி: மூவர் கைது

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.12-

இம்மாதம் முற்பகுதியில் ஜோகூர், ஶ்ரீ ஆலாம், கோத்தா புத்ரி, தாமான் சஹாயாவிக் இருவரை வெட்டுக் கத்தியினால் தாக்கிக் கடும் காயங்களை விளைவித்து, அவர்களைக் கொலை செய்ய முயற்சித்ததாகச் சந்தேகிக்கப்படும் மூன்று ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி நிகழ்ந்த இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உள்ளூரைச் சேர்ந்த 27 மற்றும் 30 வயதுடைய இரு நபர்கள் கடுமையாகக் காயமுற்றதாக ஶ்ரீ அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் சொஹைமி இஷாக் தெரிவித்தார்.

இருவர் பயணித்தக் காரை மோதித் தள்ளிய பின்னர் அவர்களை வெட்டுக் கத்தியினால் மொத்தம் நான்கு நபர்கள் சரமாரியதாகத் தாக்கியுள்ளனர் என்று ஏசிபி முகமட் சொஹைமி குறிப்பிட்டார்.

தலை மற்றும் உடலில் கடும் வெட்டுக் காயங்களுக்கு ஆளான அவ்விரு நபர்கள் மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டுச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்