Sep 18, 2026
Thisaigal NewsYouTube
அம்பாங் பங்களாவில் போதைப்பொருள் ஆய்வகம் - 11 பேர் கைது
தற்போதைய செய்திகள்

அம்பாங் பங்களாவில் போதைப்பொருள் ஆய்வகம் - 11 பேர் கைது

Share:

கிள்ளான் பள்ளத்தாக்கில், 6 இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த இருவர் தலைமையில் செயல்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் தயாரிப்பு கும்பலை போலீசார் முறியடித்தனர்.

இதில் 25 முதல் 48 வயதிற்க்குட்பட்ட 11 பேர் கைது செய்யப்பட்டதுடன், 35.24 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ ஹுசேன் ஓமார் கான் கூறுகையில், கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாட்டுப் பிரஜைகள், அக்கும்பலின் முக்கிய மூளையாகவும், போதைப்பொருள் தயாரிக்கும் வேதியியலாளர்களாகவும் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அம்பாங்கில் வாடகைக்கு எடுக்கப்பட்ட பங்களா ஒன்று, போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகமாக பயன்படுத்தப்பட்டதும், சுபாங் ஜெயாவில் மற்றொரு ஆய்வகத்தை அமைக்கத் தேவையான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்டவற்றில் 344.89 கிலோ மெத்தாம்பெத்தாமின் தூள், 347.15 லிட்டர் திரவ வடிவ மெத்தாம்பெத்தாமின், 3.84 கிலோ எம்டிஎம்ஏ தூள், 630 கிராம் எரிமின் 5 மாத்திரைகள் மற்றும் 20 கிராம் கஞ்சாவும் அடங்கும்.

Related News

நஜிப்புக்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கியது மன்னிப்பு வாரியம்: 50 மில்லியன் செலுத்தினால் வீட்டுக் காவலுக்கு அனுமதி

நஜிப்புக்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கியது மன்னிப்பு வாரியம்: 50 மில்லியன் செலுத்தினால் வீட்டுக் காவலுக்கு அனுமதி

நஜிப்பின் வீட்டுக் காவல் மனுவிற்கு மன்னிப்பு வாரியம் அனுமதியா? லங்காக் டூத்தா இல்லம் முன்பு குவியும் ஊடகங்கள்

நஜிப்பின் வீட்டுக் காவல் மனுவிற்கு மன்னிப்பு வாரியம் அனுமதியா? லங்காக் டூத்தா இல்லம் முன்பு குவியும் ஊடகங்கள்

“சட்டவிரோதக் கோயில்கள்” குறித்த முகநூல் பதிவு விவகாரம்: ஸம்ரி வினோத் வழக்கு ஏப்ரலில் விசாரணை

“சட்டவிரோதக் கோயில்கள்” குறித்த முகநூல் பதிவு விவகாரம்: ஸம்ரி வினோத் வழக்கு ஏப்ரலில் விசாரணை

சமய உணர்வுகளைப் புண்படுத்தும் பேச்சு - சிப்பாங் அம்னோ தலைவரிடம் போலீஸ் விசாரணை

சமய உணர்வுகளைப் புண்படுத்தும் பேச்சு - சிப்பாங் அம்னோ தலைவரிடம் போலீஸ் விசாரணை

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து 20 வயது தொழிலாளி உயிரிழப்பு

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து 20 வயது தொழிலாளி உயிரிழப்பு

ஜோகூரில் ஆவணங்கள், உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 53 வெளிநாட்டினர் சிக்கினர்

ஜோகூரில் ஆவணங்கள், உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 53 வெளிநாட்டினர் சிக்கினர்