ஜோகூர் பாரு உத்தாரா மாவட்டத்தில், உரிய ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டிய 53 வெளிநாட்டினர் போலீசாரின் 5 நாள் சோதனை நடவடிக்கையில் சிக்கினர்.
கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த நடவடிக்கையில், போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கா பிரிவைச் சேர்ந்த போலீசார் வெளிநாட்டினர் பயன்படுத்திய 53 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ராடின் ரம்லான் ராடின் தாஹா கூறுகையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வெளிநாட்டு ஓட்டுநர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களைக் குறி வைத்து இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
மொத்தம் 103 போக்குவரத்து விதிமீறல்களுக்காக சம்மன்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








