Sep 18, 2026
Thisaigal NewsYouTube
கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து 20 வயது தொழிலாளி உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து 20 வயது தொழிலாளி உயிரிழப்பு

Share:

சபா மாநிலம் பெனாம்பாங்கில் உள்ள ஜாலான் புண்டுசான் பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 20 வயது தொழிலாளி ஒருவர், கட்டிடத்தின் 20-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நேற்று செப்டம்பர் 17-ஆம் தேதி காலை சுமார் 10.40 மணியளவில் நிகழ்ந்தது. கட்டிடத்தின் 20-வது மாடியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கால் தவறி அவர் கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு தொழிலாளி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதாக பெனாம்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் சேம்மி நியூட்டன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கு திடீர் மரணமாகப் பதிவு செய்யப்பட்டு, உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related News

நஜிப்புக்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கியது மன்னிப்பு வாரியம்: 50 மில்லியன் செலுத்தினால் வீட்டுக் காவலுக்கு அனுமதி

நஜிப்புக்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கியது மன்னிப்பு வாரியம்: 50 மில்லியன் செலுத்தினால் வீட்டுக் காவலுக்கு அனுமதி

நஜிப்பின் வீட்டுக் காவல் மனுவிற்கு மன்னிப்பு வாரியம் அனுமதியா? லங்காக் டூத்தா இல்லம் முன்பு குவியும் ஊடகங்கள்

நஜிப்பின் வீட்டுக் காவல் மனுவிற்கு மன்னிப்பு வாரியம் அனுமதியா? லங்காக் டூத்தா இல்லம் முன்பு குவியும் ஊடகங்கள்

“சட்டவிரோதக் கோயில்கள்” குறித்த முகநூல் பதிவு விவகாரம்: ஸம்ரி வினோத் வழக்கு ஏப்ரலில் விசாரணை

“சட்டவிரோதக் கோயில்கள்” குறித்த முகநூல் பதிவு விவகாரம்: ஸம்ரி வினோத் வழக்கு ஏப்ரலில் விசாரணை

சமய உணர்வுகளைப் புண்படுத்தும் பேச்சு - சிப்பாங் அம்னோ தலைவரிடம் போலீஸ் விசாரணை

சமய உணர்வுகளைப் புண்படுத்தும் பேச்சு - சிப்பாங் அம்னோ தலைவரிடம் போலீஸ் விசாரணை

அம்பாங் பங்களாவில் போதைப்பொருள் ஆய்வகம் - 11 பேர் கைது

அம்பாங் பங்களாவில் போதைப்பொருள் ஆய்வகம் - 11 பேர் கைது

ஜோகூரில் ஆவணங்கள், உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 53 வெளிநாட்டினர் சிக்கினர்

ஜோகூரில் ஆவணங்கள், உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 53 வெளிநாட்டினர் சிக்கினர்