கட்டொழுங்கு பிரச்சனை, பணியில் கவனக்குறைவு, விதிகளை மீறுதல் முதலிய பிரச்சனைகளை கொண்டுள்ள ஆசியர்களுக்கு சேவை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படாது என பிரதமர் திட்டவட்டமாக கூறினார்.
இதுவரை ஆசிரியர்களுக்கு சேவை அடிப்படையில் இயல்பாகவே பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் இனி ஆசிரியர் பணிக்கு இடையூறை ஏற்படுத்துவோருக்கு அத்தகைய சலுகைகள் வழங்கப்படமாட்டது என திடமாக தெரிவித்தார்.
இருப்பினும் நாட்டில் உள்ள 90 விழுக்காட்டு ஆசிரியர்கள் மத்தியில் இதுவரை எந்தவொரு பிரச்சனையும் தென்படவில்லை என டத்தோ ஸ்ரீ அன்வர் புகழாரம் சூட்டினார்.








