Jul 5, 2026
Thisaigal NewsYouTube
கார் ஆற்றில் பாய்ந்த சம்பவத்தில் தம்பதியர் தேடப்படுகின்றனர்
தற்போதைய செய்திகள்

கார் ஆற்றில் பாய்ந்த சம்பவத்தில் தம்பதியர் தேடப்படுகின்றனர்

Share:

காஜாங், ஜூலை.09-

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்துள்ளது. அந்த காரில் இருந்ததாக நம்பப்படும் ஒரு தம்பதியர், காரிலிருந்து தப்பித்து, தலைமறைவாகி விட்டனர். அவர்களைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று காலை 9 மணியளவில் உலு லங்காட், சுங்கை லோங், ஜாலான் குவாரியில் உள்ள ஓர் ஆற்றில் நிகழ்ந்தது. இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து போலீசாருக்குத் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஆற்றில் மூழ்கும் தருவாயில் உள்ள அந்தக் காரை, தீயணைப்பு, மீட்புப்ப படையினரின் உதவியுடன் சோதனையிட்ட போது, காரில் யாரும் இல்லை என்பது உறுதிச் செய்யப்பட்டது.

அதே வேளையில், அந்தக் காரைக் கணவனும், மனைவியும் வாடகைக்குப் பெற்றுச் சென்றதாக காரின் உரிமையாளர் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதில் உயிருடற் சேதம் நிகழவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக ஏசிபி நாஸ்ரோன் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

கார் ஆற்றில் பாய்ந்த சம்பவத்தில் தம்பதியர் தேடப்படுகின்றனர் | Thisaigal News