Jan 24, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் மாவட்ட போலீஸ் தலைவர் மீது லஞ்ச குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

முன்னாள் மாவட்ட போலீஸ் தலைவர் மீது லஞ்ச குற்றச்சாட்டு

Share:

கடந்த 2019 ஆம் ஆண்டுக்கும், 2022 ஆம் ஆண்டுக்கும் இடைப்பபட்ட கால கட்டத்தில் 70 ஆயிரத்து 600 வெள்ளி லஞ்சம் வாங்கியதாக பகாங், தெமர்லோ மாவட்ட முன்னாள் போலீஸ் தலைவர் மீது 46 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குவந்தான், செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 53 வயதான முகமது அசார் முகமட் யூசாஃப், தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் என்ற முறையில் தமது அதிகாரத்துவ பணி தொடர்புடைய விவகாரங்களில் வங்கி பண மாற்ற நடவடிக்கையின் வாயிலாக இந்த லஞ்சத்தை பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறைந்த பட்சம் 100 வெள்ளியிலிருந்து கூடிய பட்சம் 5 ஆயிரத்து 600 வெள்ளி வரையில் லஞ்சம் பெற்றதாக அவருக்கு எதிரான 47 குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2009 ஆம் ஆண்டு லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் அந்த முன்னாள் மாவட்ட போலீஸ் தலைவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு