May 6, 2026
Thisaigal NewsYouTube
மேம்பாலத்திலிருந்து குதிக்கப் போவதாக அச்சுறுத்திய நபர் காப்பாற்றப்பட்டார்
தற்போதைய செய்திகள்

மேம்பாலத்திலிருந்து குதிக்கப் போவதாக அச்சுறுத்திய நபர் காப்பாற்றப்பட்டார்

Share:

ஜார்ஜ்டவுன், டிசம்பர்.19-

இன்று மதியம் சுமார் 12.00 மணியளவில், பினாங்கில் உள்ள ஜாலான் மஸ்ஜித் நெகிரி மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அச்சுறுத்திய நபர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

மேம்பாலத்தில் உள்ள "For how you live" என்ற விளம்பரப் பலகையின் அருகே அந்த நபர் நின்று கொண்டு இத்தகைய அச்சுறுத்தலை விடுத்தார்.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிரீன்லேன் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் வாகனங்கள் நீண்ட தூரம் ஸ்தம்பித்தன.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் அந்த நபரை சமாதானப்படுத்தி கீழே இறக்கினர். இந்தச் சம்பவம் குறித்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் குறிப்பாக Penang Today போன்ற குழுக்களில் பகிரப்பட்டு வருகின்றன.

உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு மன உளைச்சல் அல்லது தற்கொலை எண்ணங்கள் இருந்தால், பின் வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

• Befrienders Malaysia: 03-76272929

• Talian Kasih: 15999

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்