Mar 21, 2026
Thisaigal NewsYouTube
வேலை மோசடியில் வெளிநாட்டு பிரஜைகள் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

வேலை மோசடியில் வெளிநாட்டு பிரஜைகள் பாதிப்பு

Share:

கூலாய், மே 14-

கேங் பாலா எனப்படும் வேலை மோசடியில் சிக்கிய வெளிநாட்டு பிரஜைகள் சிறைபிடிக்கப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்பட்டதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது,

தொழிற்சாலை ஆபரேட்டர், வீட்டு வேலை செய்தல் போன்றவற்றிற்கு வேலை வாங்கி தருவதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிண்டிகேட்டுகள் வாக்குறுதியளித்து அவர்களை அழைத்துச் சென்று ஏமாற்றுவதாக ஜொகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் எம். குமார் தெரிவித்தார்.

22 க்கும் 49 க்கும் இடைப்பட்ட வயதுடைய வெளிநாட்டு பிரஜைகள் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றவும் ஒருநாளைக்கு 35 முறை உடலுறவில் ஈடுபடுத்த கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் குமார் கூறினார்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி மற்றும் மே 1 ஆம் தேதி ஜொகூர், கூலாய்-யில் மேற்கொண்ட திடீர் சோதனையில் கேங் பாலா சிண்டிகேட்டுகளான நான்கு உள்ளூர் மற்றும் நான்கு வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக குமார் மேலும் குறிப்பிட்டார்.

இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் பாதுகாப்பாக மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கும் வேளையில், கைது செய்யப்பட்ட எட்டு பேர் மீது நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குமார் அறிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து