தாப்பா, குனுங் பத்து புத்தே மலையில் ஏறியபோது காணாமல் போன ஜாஸ்லிண்டா சலுடின் என்ற பெண்ணைத் தேடும் பணியில், மேலும் 16 மீட்புப் படை வீரர்கள் களமிறக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தீயணைப்புத் துறையின் சிறப்புப் பிரிவு, வனவிலங்குத் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் அடங்கிய புதிய குழுவினர் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை மலை உச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதன் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள மொத்த வீரர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. அடர்ந்த காடுகளுக்குள் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் சிப்களை கைப்பற்றி ஆய்வு செய்யும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. 3,000 முதல் 7,000 அடி வரையிலான கரடுமுரடான பரப்பளவில் இந்தத் தேடுதல் வேட்டை மிகவும் சவாலாகத் தொடர்கிறது.








