May 6, 2026
Thisaigal NewsYouTube
ஆற்று நீரில் சிக்கி பலியான சுரேஸின் குடும்பத்தினருக்கு மாதம் 2,655 ரிங்கிட் – பெர்கேசோ அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

ஆற்று நீரில் சிக்கி பலியான சுரேஸின் குடும்பத்தினருக்கு மாதம் 2,655 ரிங்கிட் – பெர்கேசோ அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், நவம்பர்.29-

கடந்த வாரம் சுங்கை கிளாங் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, 4 நாட்கள் தேடலுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சுரேஸ் கமலநாதனின் குடும்பத்தினர், சமூக பாதுகாப்பு நிறுவனமான பெர்கேசோ நிதியைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

இதனை பெர்கேசோ நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளது.

37 வயதான சுரேஸ் கமலநாதன் குத்தகை நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த நிலையில், LINDUNG Perkerja என்ற தொழிலாளர் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து முறையாகச் சந்தா செலுத்தி வந்துள்ளார்.

என்றாலும், கடந்த ஏப்ரல் மாதத்தோடு அவரது சந்தா தொகையானது செலுத்தப்படாமல் நின்று போன நிலையில், அக்டோபர் மாதம் வரையிலான மீதமுள்ள சந்தா தொகையை, சுரேஸ் பணியாற்றிய குத்தகை நிறுவனம் செலுத்தியது.

இதனையடுத்து, பெர்கேசோ திட்டத்தின் கீழ் சுரேசின் குடும்பத்தினரான அவரது மனைவிக்கும், அவரது 6 வயது மகனுக்கும் மாதந்தோறும் 2,655 ரிங்கிட்டும், சுரேசின் இறுதிச் சடங்கு செலவிற்காக 3000 ரிங்கிட்டும் வழங்கப்படும் என்று பெர்கேசோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்