Aug 10, 2026
Thisaigal NewsYouTube
ஆடவரிடமிருந்து விலங்கினங்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

ஆடவரிடமிருந்து விலங்கினங்கள் பறிமுதல்

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல்.09-

உளவுத் தகவல் அடிப்படையில் கூட்டரசு சேமப்படையினரும், வனவிலங்கு, தேசியப் பூங்கா இலாகாவினரும் ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் ஆடவர் ஒருவரிடமிருந்து 91 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள வனவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புக்கிட் அமான் போலீஸ் தலைமைகத்தைச் சேர்ந்த FRU- பிரிவினரும், ஜோகூர் பெர்ஹிலிதான் இலாகாவினரும் கடந்த திங்கட்கிழமை ஜோகூர் பாரு, பண்டார் பாரு கங்கார் பூலாயில் உள்ள இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் பாதுகாக்கப்பட வேண்டிய பலதரப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றின் மொத்த மதிப்பு 91 ஆயிரம் ரிங்கிட்டாகும் என்று அரச மலேசியப் போலீஸ் படையின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதிப் பிரிவு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட வன விலங்குகளில் சருகுமான், முள்ளம்பன்றி போன்றவை அடங்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது. காட்டில் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த விலங்கினங்களைச் சட்டவிரோத வர்த்தக நோக்கத்தில் வீட்டில் வைத்திருந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி