Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரில் மலேசியர் தட்சிணாமூர்த்தியின் தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம்!
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூரில் மலேசியர் தட்சிணாமூர்த்தியின் தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.25-

சிங்கப்பூர் சாங்கி சிறையில், மலேசியர் தட்சிணாமூர்த்தி காத்தையாவிற்கு, இன்று அதிகாலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் அது நிறுத்தப்பட்டது.

தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தாருக்கு நேற்று இரவு சாங்கி சிறை நிர்வாகம் இத்தகவலை அளித்ததாக அவர்களது குடும்ப வழக்கறிஞர் என். சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

என்றாலும், சிறை நிர்வாகம் ஏன் இம்முடிவை எடுத்துள்ளது என்பது குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என்றும் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக கிட்டத்தட்ட 45 கிராம் ஹெராயின் போதைப் பொருளைக் கடத்தியதற்காக, தட்சணாமூர்த்தி சிங்கப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்