Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரில் மலேசியர் தட்சிணாமூர்த்தியின் தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம்!
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூரில் மலேசியர் தட்சிணாமூர்த்தியின் தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.25-

சிங்கப்பூர் சாங்கி சிறையில், மலேசியர் தட்சிணாமூர்த்தி காத்தையாவிற்கு, இன்று அதிகாலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் அது நிறுத்தப்பட்டது.

தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தாருக்கு நேற்று இரவு சாங்கி சிறை நிர்வாகம் இத்தகவலை அளித்ததாக அவர்களது குடும்ப வழக்கறிஞர் என். சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

என்றாலும், சிறை நிர்வாகம் ஏன் இம்முடிவை எடுத்துள்ளது என்பது குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என்றும் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக கிட்டத்தட்ட 45 கிராம் ஹெராயின் போதைப் பொருளைக் கடத்தியதற்காக, தட்சணாமூர்த்தி சிங்கப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்