ஜோகூர், பத்து பஹாட் கடற்பகுதியில் இன்று மாலை 4.12 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பத்து பஹாட்டில் இருந்து தென்மேற்கே 18 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
எனினும்இ சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








