Mar 23, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

Share:

கெடா மாநிலத்தில் நிலவி வரும் கடும் வெப்பம் மற்றும் வறட்சியான கால நிலையால், பொதுமக்கள் வெளிப்புற செயல்பாடுகளை குறைத்து, நேரடி சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடாமல் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மலேசிய வானிலை ஆய்வு துறையான மெட்மலேசியா வழங்கிய தகவலின்படி, படாங் தெராப் மாவட்டத்தில் 37°C முதல் 40°C வரை வெப்பநிலை பதிவாகி, வெப்ப அலை நிலை உருவாகியுள்ளதாக மாநில வீடமைப்பு, ஊராட்சி மற்றும் சுகாதாரக் குழு தலைவர் மன்சூர் ஜகாரியா தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாக மழை பெய்யாததால், கெடாவில் மற்ற மாநிலங்களை விட அதிக வெப்பம் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஹரிராயா கொண்டாட்டங்களுக்காக பிறரை சந்திப்பது அல்லது பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக வெப்பத்தால் 'Heat Stroke' எனப்படும் வெப்ப வாதம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், மக்கள் அடிக்கடி நீர் அருந்த வேண்டும் என்றும் மன்சூர் தெரிவித்துள்ளார்.

Related News

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

இஸ்கண்டார் புத்ரி பகுதியில் ‘ஓப்பராசி சாம்செங் ஜாலானான்’ நடவடிக்கை – 32 சம்மன்கள் வழங்கப்பட்டன

இஸ்கண்டார் புத்ரி பகுதியில் ‘ஓப்பராசி சாம்செங் ஜாலானான்’ நடவடிக்கை – 32 சம்மன்கள் வழங்கப்பட்டன