Mar 13, 2026
Thisaigal NewsYouTube
அல்தான்துய்யா கொலை வழக்கில் 10 லட்சம் வெள்ளி பெற்றேன்
தற்போதைய செய்திகள்

அல்தான்துய்யா கொலை வழக்கில் 10 லட்சம் வெள்ளி பெற்றேன்

Share:

2006 ஆம் ஆண்டு நிகழ்ந்த மங்கோலியா முன்னாள் மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபு கொலை தொடர்பில் தமது வாயை மூடுவதற்கு முக்கிய அரசியவாதி ஒருவரின் வழக்கறிஞர் மூலம் தாம் பத்து லட்சம் வெள்ளியை பெற்றதாக இக்கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த முன்னாள் அதிரடி போலீஸ்காரர் சிருல் அஸ்ஹர் உமர் தெரிவித்துள்ளார்.

குடிநுழைவு சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த அந்த முன்னாள் போலீஸ் அதிகாரி, கடந்த வாரம் தனது விடுதலைக்கு பிறகு அல்ஜீரியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த காலகட்டத்தில் ஒரு வழக்கறிஞர் மூலம் தாம் 10 லட்சம் வெள்ளியை பெற்றதை சிருள் ஒப்புக்கொண்டார்.

அல்தான்துய்யா கொலை விவகாரத்தில் குறிப்பிட்ட தரப்பினரால் தாம் பலிகடாவாக்கப்பட்டுள்ளதாக மலேசியா திரும்ப மறுத்து விட்ட சிருள் தமது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!