தவாவ்,ஜன.18
தவாவ், போம்பலாய்-யில் முன்னாள் மனைவியை அடித்து துன்புறுத்திய குற்றத்திற்கு ஆடவன் ஒருவர் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
நள்ளிரவு 12 மணியளவில் சந்தேகிக்கும் 37 வயதுடைய ஆடவன் மற்றும் 42 பாதிக்கப்பட்டவர் கருத்து வேறுப்படு காரணமாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொதுமக்களிடமிருந்து கிடைக்கபெற்ற புகாரை தொடர்ந்து காவல்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்ததாக தவாவ், போலீஸ் தலைவர் ஜஸ்மின் ஹுசின் கூறினார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் முகத்தில் இரத்தம் வரும் வரை அடித்திருப்பதாகவும் அவ்வாடவன் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜஸ்மின் ஹுசின் விவரித்தார்.








