Mar 22, 2026
Thisaigal NewsYouTube
சக பள்ளி மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக நான்காம் படிவ மாணவன் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சக பள்ளி மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக நான்காம் படிவ மாணவன் மீது குற்றச்சாட்டு

Share:

சிரம்பான், ஆகஸ்ட்.29-

இடைநிலைப்பள்ளி ஒன்றின் வகுப்பறையில் சக பள்ளி மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக நான்காம் படிவ மாணவன் ஒருவன் சிரம்பான், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டான்.

மாஜிஸ்திரேட் சைஃபுல் சயொடி முன்னிலையில் நிறுத்தப்பட்ட 16 வயதுடைய அந்த மாணவன், தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டான்.

மாணவனின் குறைந்த வயது காரணமாக வழக்கு விசாரணை ரகசியமாக நடைபெற்றது. கடந்த மே 2 ஆம் தேதி சிரம்பான், அம்பாங்கானில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளியின் வகுப்பறையில் காலை 7.20 மணியளவில் 14 வயது மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாணவன் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் இராணுவ வீரரான அந்த மாணவனின் தந்தை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். மகனை ஜாமீனில் விடுவிப்பதற்கு குறைந்த பிணைத் தொகையை விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

தீர்ப்பு சொல்லப்படும் வரையில் அந்த மாணவனை நான்கு ஆயிரம் ரிங்கிட் ஜாமீனிவில் விடுவிப்பதற்கு மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு