நாட்டின் முன்னணி செய்தி வாசிப்பாளராக திகழ்ந்த மாதுவை மானபங்கம் செய்ததாக அவருடன் ஒன்றாக பணிாயற்றும் உதவி நிர்வாகி ஒருவர், இன்று பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.முஹமாட் ஃபைசாக் ஹுசெயின் என்ற 53 வயதுடைய அந்த உதவி நிர்வாகி மாஜிஸ்திரேட் சஃப்ரான் ராஹிம் ஹம்சா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட நிர்வாகி, 54 வயதுடைய அந்த பிரபல பெண் செய்தி வாசிப்பாளரை டாமன்சாராவில் உள்ள ஒரு ஹோட்டலில் மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜுலை 13 ஆம் தேதி மதியம் ஒரு மணியளவில் அவர் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 354 ஆவது பிரிவின் கீழ் அந்த நிர்வாகி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








