Aug 10, 2026
Thisaigal NewsYouTube
இரு லோரிகள் மோதிக் கொண்ட கோர விபத்தில் தந்தை, மகன் பலி
தற்போதைய செய்திகள்

இரு லோரிகள் மோதிக் கொண்ட கோர விபத்தில் தந்தை, மகன் பலி

Share:

தாப்பா, மார்ச்.18-

டிரெய்லர் லோரி ஒன்று, மற்றொரு லோரியுடன் மோதி தீப்பிடித்துக் கொண்டதில் தந்தையும், மகனும் கருகி மாண்டனர்.

இச்சம்பவம் இன்று காலை 7.40 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 331.8 ஆவது கிலோ மீட்டரில் தப்பாவிற்கு அருகில் நிகழ்ந்தது.

டிரெய்லர் லோரியில் பயணித்த 40 வயது தந்தையும், 20 வயது மகனும் அந்த கனரக வாகனத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, தப்பிக்க முடியாமல் கொழுந்து விட்டு எரிந்த தீயில் கருகி மாண்டதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படும் அந்த டிரெய்லர் லோரி, எதிரே சென்று கொண்டிருந்த லோரியின் பின்புறம் மோதியதாக நம்பப்படுகிறது.

டிரெய்லர் லோரியின் தலை கடுமையாகச் சேதமுற்ற நிலையில் மின்னல் வேகத்தில் தீப்பிடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து