Jul 4, 2026
Thisaigal NewsYouTube
மூவார் எம்.பி.க்கு இறுதியில் மானியம் கிடைத்தது
தற்போதைய செய்திகள்

மூவார் எம்.பி.க்கு இறுதியில் மானியம் கிடைத்தது

Share:

கோலாலம்பூர், ஜூலை.21-

தாம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மூவார் தொகுதிக்கு அரசாங்க மானியம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கடந்த 500 நாட்களுக்கு மேலாகப் போராடி வந்த மூடா கட்சியின் முன்னாள் தலைவர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மானுக்கு இறுதியில் 2 லட்சம் ரிங்கிட் மானிய ஒதுக்கீடு கிடைத்துள்ளது.

அந்த மூவார் எம்.பி. இது குறித்து தனது தொகுதி மக்களுக்கு அறிவித்துள்ளார். பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு நல்கி வந்த சையிட் சாடிக், தனது ஆதரவை மீட்டுக் கொண்டு, எதிர்க்கட்சி உறுப்பினராக மாறியதைத் தொடர்ந்து ஆளும் அரசாங்க எம்.பி.க்களுக்கு கிடைத்து வரும் மானியம் அவருக்கு நிறுத்தப்பட்டது.

இதனால், தனது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வதற்காக மூவாரிலிருந்து நாடாளுமன்றம் வரை நெடுந்தூர ஓட்டத்தின் மூலம் சையிட் சாடிக், நிதி திரட்டி வந்தார். மாடல் அழகராகவும் பணியாற்றி, தொகுதி மக்களுக்கு பணம் திரட்டி வந்தார்.

எனினும் அரசாங்கம் வழங்கி வந்த இந்த இரண்டு லட்சம் ரிங்கிட், தொகுதியில் உள்ள சேவை மையத்தின் வாடகை, பணியாளர்கள் சம்பளம், நிர்வாக செயல்பாட்டிற்கான செலவினம் ஆகியவற்றுக்கே சரியாக இருக்கும் என்று சையிட் சாடிக் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது