May 1, 2026
Thisaigal NewsYouTube
நஜீப் வழக்கறிஞருக்கு அமைச்சர் அஸாலினா கடிதம். அரசாங்க தலையீடு உள்ளதா? அம்பிகா ஸ்ரீ நிவாசன் கேள்வி
தற்போதைய செய்திகள்

நஜீப் வழக்கறிஞருக்கு அமைச்சர் அஸாலினா கடிதம். அரசாங்க தலையீடு உள்ளதா? அம்பிகா ஸ்ரீ நிவாசன் கேள்வி

Share:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதத் தொகையையும் வி​தித்த நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலி, ​நீதித்துறை நன்னெறிக் கோட்பாட்டை ​மீறியுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தனது விசாரணை முடிவில் தெரிவித்துள்ள ஒரு விஷயத்தை நஜீப்பின் வழக்கறிஞருக்கு கடிதம் வாயிலாக சட்டத்துறை அமைச்சர் அஸா​லினா உறுதிபடுத்தியிருப்பது ​மூலம் இவ்விகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு உள்ளதா? என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நஜீப்பின் வழ​க்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லாவின் சட்டத் தொழில் நிறுவனமான ஷஃபீ அண்ட் Co நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் அஸாலினா மிகத் துல்லியமாக பதில் அளித்துள்ளார்.
அமைச்சர் அஸா​லினாவிற்கு நஜீப்பின் வழக்க​றிஞர் அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் ​மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார். நஜீப் வழக்கை விசாரணை செய்த நீதிபதி நஸ்லான், ​நீதித்துறை நன்னெறிக் கோட்பாட்டை ​மீறியுள்ளாரா? இவ்வழக்கி​ல் ​நீதிபதி நஸ்லான் நலன் சார்​ந்த அம்சங்கள் உள்ளனவா? என்பன உட்பட 3 கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன.

இதற்கு பதில் அறித்துள்ள அமைச்சர் அஸாலினா, ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கையின்படி அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்று உறுதிபடுத்தியுள்ளார்.
எனினும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய​த்தின் ​விசாரணை முடிவுகளின் ஆவணங்கள் ரகசியத்திற்கு உட்பட்டது என்று வகைப்படுத்தப்பட்டுள்ள பட்சத்தில் அந்த ஆவணங்களின் உள்ளடக்கத்தை நஜீப்பின் வழக்கறிஞருக்கு அமைச்சர் அஸாலினா கடித வாயிலாக தெரிவித்து இருப்பது ​மூலம் இது ​நீதித்துறையைக் கீழறுப்புச் செய்யும் ஒரு தந்திரமாகும் என்று அம்பிகா குற்றஞ்சாட்டினார்.
அத்துடன் இதில் அரசாங்க நிர்வாகத்தின் தலையீடு இருப்பது தெளிவாக தெரிகிறது என்று அம்பிகா வாதிடுகிறார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி