Mar 21, 2026
Thisaigal NewsYouTube
இரு சட்ட அமலாக்க அதிகாரிகள் ஏழு நாட்கள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

இரு சட்ட அமலாக்க அதிகாரிகள் ஏழு நாட்கள் தடுப்புக்காவல்

Share:

மசானா சினின், மே 14-

முறையான பயண ஆவணங்கள் ஏதுமின்றி நாட்டினுள் குடிநுழைந்த இரண்டு இந்தோனேசிய தொழிலாளர்கள் மீது சட்டப்படி எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் 2,500 வெள்ளி கையூட்டு பெற்ற குற்றத்திற்காக இரண்டு சட்ட அமலாக்க அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

மலாக்கா, ஜாசினில் நேற்று இரவு 11.30 மணியளவில் 39 வயது நபர் ஒருவர் இதுக்குறித்து புகார் அளித்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணை முடியும் வரையில் 58 மற்றும் 37 வயதிற்கு உட்பட்ட அந்த அதிகாரிகளை தடுப்பு காவலில் வைப்பதற்கு எஸ்.பி.ஆர்.எம் விண்ணப்பித்ததை தொடர்ந்து, அவ்விருவரும் இன்று தொடங்கி வருகின்ற மே 20 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைப்பதற்கு மஜிஸ்ட்ரெட் மசானா சினின் உத்தரவிட்டுள்ளார்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10,000 வெள்ளி அபராதம் மற்றும் 20 ஆண்டுகள் சிறை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 17 (a) கீழ் அவ்விருவரும் குற்றச்சாட்டப்படுவர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து