கோலாலம்பூர் மாநகரில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனத்த மழையில், 15 பள்ளிகள் கடுமையாக பதிக்கப்பட்ட வேளையில், அதன் உள்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.
டேசா பெர்டானா இடைநிலைப்பள்ளி, ஶ்ரீ திதிவங்சா இடைநிலைப்பள்ளி, தாமான் மெலாத்தி இடைநிலைப்பள்ளி, ஜிங்ஜாங் இடைநிலைப்பள்ளி என மொத்தம் 15 பள்ளிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது.
கனத்த மழையில், மரங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு பள்ளியின் கூரைகள் மற்றும் சுவர்கள் மீது சாய்ந்ததில், அவை சேதமடைந்ததாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலேக்சாண்டார் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் ஏற்பட்டுள்ள சேதத்தின் வகை மற்றும் அதன் அளவைக் கண்டறிய கோலாலம்பூர் பொதுப்பணித் துறை அது தொடர்பான ஆய்வையும் விசாரணையையும் மேற்கொண்டு வருவதாக அலேக்சாண்டார் நந்தா குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


