Jul 4, 2026
Thisaigal NewsYouTube
டோல் கட்டணம் உயர்த்தப்படுவதை ஒத்தி வைப்பதே சிறந்த நடவடிக்கையாகும்
தற்போதைய செய்திகள்

டோல் கட்டணம் உயர்த்தப்படுவதை ஒத்தி வைப்பதே சிறந்த நடவடிக்கையாகும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.29-

நாட்டில் பிரதான நெடுஞ்சாலைகளில் டோல் கட்டண விதிப்பை முழுமையாக அகற்றுவதை விட டோல் கட்டண உயர்வை ஒத்தி வைப்பதே சாத்தியமான நடைமுறையாகும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலேக்ஸண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

டோல் கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களுக்கு அரசாங்கம் பில்லியன் கணக்கில் இழப்பீட்டுத் தொகையை வழங்கி வருவதாக இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது டத்தோ ஶ்ரீ அலேக்ஸண்டர் நந்தா லிங்கி இவ்விவரத்தை வெளியிட்டார்.

டோல் கட்டண விதிப்பை முழுமையாக அகற்ற இயலாது. காரணம், நெடுஞ்சாலைகளின் பராமரிப்புக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் அதிகமாகச் செலவிட்டு வருகின்றன.

இந்நிலையில் மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தாத வகையில் டோல் கட்டண உயர்வை ஒத்தி வைக்க முடியும் என்றும், இதுவே எதார்த்தமான நடைமுறையாகும் என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது