பெத்தாலிங் ஜெயா,ஜன.17
மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களின் உயிரிழப்பை குறைப்பதற்கு சாலை வழித்தடங்களை பிரிக்கும் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்று ஆய்வாளர் ஒருவர் கேட்டு கொண்டார். சாலை நிலைமைகளுக்கு பதிலாக ஓட்டுநரின் நடத்தையே பிரச்னை என்று அவர் சுட்டி காட்டினார்.
மலேசியாவின் சாலை நிலைமைகள் நிறையவே ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாக Bait Al-Amanah-வின் உறுப்பினரான கரிஸ்மா புத்ரா ரஹ்மான் கூறினார்.
மலேசியாவில் சாலை வழித்தடங்களை குறித்து தெளிவான எந்தவொரு சட்டமும் இதுவரையில் அமல்படுத்தப்படவில்லை.
அதுவே மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விருப்பம் போல் வழித்தடங்களை மாறி மாறி செல்வதை ஊக்குவிப்பதுடன் விபத்தில் சிக்குவதற்கும் வழிவகுக்கிறது.
இத்திட்டம் கடுமையாக்கப்ப்பட்டால் மோட்டர் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஒரே திசையில் நகரும் சூழ்நிலை ஏற்படுவதுடன் மெதுவாகவும் பாதுகாப்பாகவும் பயணிப்பதற்கு பங்காற்றும் என்று கரிஸ்மான் புத்ரா தெரிவித்தார்.








