ஷா ஆலாம், ஜன - 8,
ஷா ஆலாமில் உள்ள சிலாங்கூர் மந்திரி பெசாரின் வீட்டிற்குள் தங்களின் நிரூபர் அத்துமீறி நுழையவில்லை எனக் கூறுகிறது பாஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமான ஹராக்கா.
கிள்ளான், கம்போங் சுங்ஙாய் சிரெ மக்களின் அழைப்பை ஏற்று சுஃபி கமாரியும் ஹராக்காவைச் சேர்ந்த மேலும் இரு ஊழியர்களும் அங்கு வந்ததாகவும் உள்ளே நுழைய அனுமதி கொடுக்கப்பட்டதாகவும் ஹராக்கா ஊடகத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரிநட்சிர் ஹெல்மி குறிப்பிட்டார்.








