May 18, 2026
Thisaigal NewsYouTube
போலி பங்கு முதலீட்டு மோசடிக் கும்பல் முறியடிப்பு: பத்து பேர் கைது
தற்போதைய செய்திகள்

போலி பங்கு முதலீட்டு மோசடிக் கும்பல் முறியடிப்பு: பத்து பேர் கைது

Share:

செர்டாங், ஜூன்.23-

மொத்தம் 399,787 வெள்ளி சம்பந்தப்பட்ட அந்நிய நாணய முதலீட்டு மோசடியில் சம்பந்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும்
கும்பலைச் சேர்ந்த பத்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பூச்சோங், பண்டார் புத்ரியில் உள்ள மையம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 21 முதல் 38 வயது வரையிலான ஏழு ஆடவர்களும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஃபாரிட் அஹ்மாட் கூறினார்.

இவர்கள் அனைவரும் நிர்வாகி, இணையத்தள வடிவமைப்பாளர், வாடிக்கையாளர் சேவை வழங்குநர், நிறுவன ஆவணங்களைக் கையாளும் நிர்வாகத் தரப்பினர் ஆகிய பணிகளை மேற்கொண்டு வந்ததாக அவர் சொன்னார். கடந்த ஆறு மாதங்களாக செயல்பட்டு வந்த இக்கும்பல் உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டிரை இலக்காகக் கொண்டு மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தாங்கள் உருவாக்கிய செயலி வாயிலாக இக்கும்பல் தொடக்கத்தில் கவர்ச்சிகரமான லாபத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வந்துள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் சொன்னார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை