Mar 17, 2026
Thisaigal NewsYouTube
குடிநுழைவு உயர் அதிகாரி மீது 11 குற்றச்சாட்டுகள்
தற்போதைய செய்திகள்

குடிநுழைவு உயர் அதிகாரி மீது 11 குற்றச்சாட்டுகள்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.14-

தனது உறவினருக்குச் சொந்தமான மூன்று நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர் மறுகட்டமைப்பு விண்ணப்பங்களை அங்கீகரிப்பதில் தனது பதவியைத் தவறாக பயன்படுத்தியதாக குடிநுழைவுத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

KP 22 கிரேட் உயர் அதிகாரியான நோர்ஹஸ்லிண்டா ஸைனால் அபிடின், தனது உறவினரின் நிறுவனங்களின் விண்ணப்பங்களை அங்கீகரிக்குமாறு பரிந்துரை செய்தது மூலம் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று அவருக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

அந்த மூன்று நிறுவனங்களின் விண்ணப்பங்களை அங்கீகரிப்பதில் அந்தப் பெண் அதிகாரிக்கு தனிப்பட்ட நலன் சார்ந்த அம்சங்கள் இருந்துள்ளது என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு புத்ராஜெயாவில் உள்ள குடிநுழைவு தலைமையகத்தில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக 2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் அந்த அதிகாரி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு