நாடு முழுவதும் உள்ள சுகாதார கிளினிக்குகளின் வாயிலாக 234 தடுப்பூசி மையங்களை சுகாதார அமைச்சு ஏற்படுத்தியுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் டிசுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமானால் அதற்கான அவசியத்தை பொறுத்து தடுப்பூசி மையங்கள் அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
கோவிட் 19 புதிய சம்பவங்களின் எண்ணிக்கை அதிரித்து வருவதைத் தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அதிகமான தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக டாக்டர் டிசுல்கிஃப்லி தெரிவித்தார்.








