சிலாங்கூர்,ஜூலை 05-
சிலாங்கூர் அம்னோ முன்னாள் தலைவர் தன் ஸ்ரீ நோஹ் உமர், பெர்சத்து கட்சியில் இணைந்துள்ளார்.
யாரிடமும் தெரிவிக்காமல் நேற்று இணையம் வாயிலாக அக்கட்சியில் இணைவதற்கு விண்ணப்பித்ததாக கூறிய அவர், பெர்சத்து -வில் அடிப்படை உறுப்பினரானதற்கான அட்டையைப் பெற்றுவிட்டதாகவும் கூறினார்.
எஞ்சிய சிறைக்காலத்தை, வீட்டுக்காவலில் கழிப்பதற்கு, முன்னாள் பேரரசர் வழங்கியதாக கூறப்படும் கூடுதல் உத்தரவை, நடப்பு அரசாங்கம் வெளியிட வலியுறுத்தி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் செய்திருந்த நீதித்துறை சீராய்வு மனுவை நீதிமன்றம் கடந்த புதன்கிழமை நிராகரித்திருந்தது.
நீதிமன்றத்தின் அம்முடிவினால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, பெர்சத்து-வில் இணையும் முடிவை தாம் எடுத்ததாக தஞ்சோங் காரங் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான நோஹ் உமர் விளக்கம் கூறினார்.
மேலும்,டிஏபி கட்சியுடனான ஒத்துழைப்பின் வழி,தேசிய முன்னனியும் அம்னோவும் அவற்றின் அடிப்படை போராட்டத்திலிருந்து விலகிவிட்டதால், அவையிரண்டுக்கும் மாற்றாக,பேரிக்காதான் நசியனால்








