கடந்த வெள்ளிக்கிழமை சிலாங்கூர், Serendah –வில் சந்தேக நபர் ஒருவர் ஓட்டி சென்ற கார் காவல்துறையினர் வாகனம் மீது மோதிய சம்பவத்தில் அந்நபர் போலீசாரால் சுடப்பட்டு காயமடைந்தார்.
இச்சம்பவம் மாலை 4.40 மணியளவில் நடந்தது. பேராக், முவாலிம் மாவட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமாக 30 வயதுடைய நபர் ஓட்டிச் சென்ற வாகனம் அடையாளம் காணப்பட்டது என உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர் Ahmad Faizal Tahrim கூறினார்
சந்தேக நபரின் கார் செரண்டா பகுதியில் உள்ள உணவுக் கடையின் முன் நிறுத்தப்பட்டதை அடுத்து, இரண்டு வாகனங்களுடன் போலீசார் வழியைத் தடுத்தனர். ஆனால, சம்பந்தப்பட்ட நபர் போலீசாரின் வாகனத்தின் மீது மோதி உறுப்பினர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.
சந்தேக நபரின் வாகனத்தின் மீது போலீஸ் குழு துப்பாக்கிச் சூடு நடத்தியது. பின்னர், நடத்தப்பட்ட சோதனையில் துப்பாக்கிச் சூட்டில் அந்நபருக்கு அடிவயிற்றில் காயம் ஏற்பட்டது தெரிய வந்தது என்று ஓர் அறிக்கையல் அவர் தெரிவித்தார்.








