கெமாமான், ஜன. 18-
திரெங்கானு, கெமாமான், பாடாங் அஸ்தாகா சுக்காய் உழவர் சந்தையில் மாற்றுத் திறனாளி ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் மூன்று ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒரு வர்த்தகர் உட்பட அந்த மூவரும் இன்று காலையில் கைது செய்யப்பட்டதாக கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. வான் முகமட் வான் ஜப்பார் தெரிவித்தார்.
அடியை வாங்கிக்கொண்டு, எதிர்த்துப் போராட முடியாமல் அந்த மாற்றுத் திறனாளி வலியால் துடிதுடித்துப் போன காட்சியை கொண்ட காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது, மிகுந்த கவன ஈர்ப்பாக மாறியது.
ஈவுயிரக்கமின்றி இந்த செயலில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று போலீஸ் துறையை வலைவாசிகள் வலியுறுத்தியிருந்தனர்.







