Apr 1, 2026
Thisaigal NewsYouTube
புத்ரா ஹைட்ஸ் வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தலா 1000 ரிங்கிட் உதவி நிதி – அறிவித்தார் பாஃட்லீனா சீடேக்
தற்போதைய செய்திகள்

புத்ரா ஹைட்ஸ் வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தலா 1000 ரிங்கிட் உதவி நிதி – அறிவித்தார் பாஃட்லீனா சீடேக்

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.02-

சுபாங் ஜெயா நிலத்தடி குழாய் வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என ஒவ்வொருவருக்கும் மலேசிய கல்வி அமைச்சு தலா 1,000 ரிங்கிட் உடனடி உதவியை அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கவும், கல்வி ஊழியர்களின் நலனைத் தொடர்ந்து பாதுகாக்கவும் இந்த உதவி வழங்கப்படுவதாக அதன் அமைச்சர் பாஃட்லீனா சீடேக் தெரிவித்தார்.

இந்த உதவி துன் ஹுசேன் ஓன் ஆசிரியர் அறக்கட்டளை வாயிலாகவும் யாயாசான் டிடிக் நெகாரா அறக்கட்டளை வாயிலாகவும் வழங்கப்படுகிறது. இதில் பள்ளி உதவி உட்பட பிற உதவிகளும் அடங்கும் என்று இன்று காலை புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ளத் தற்காலிக துயர் துடைப்பு மையத்திற்கு சென்றபோது அவர் கூறினார். இந்த சம்பவத்தில் 23 பள்ளிகளைச் சேர்ந்த ஐந்து ஆசிரியர்களும் 102 மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு மாணவர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்