அந்நிய நாட்டைச் சேர்ந்த மாதுவை மடக்கி கொள்ளையடித்துடன், அவரின் கடப்பிதழைப் பறித்துக்கொண்டதாக லான்ஸ் காப்ரல் அந்தஸ்தைக் கொண்ட இரண்டு போலீஸ்காரர்களுக்கு எதிராக, மலாக்கா, ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
31 வயதுடைய தி.எஸ். பிரவின் மற்றும் முகமட் சஃப்ரி இட்ரீஸ் என்ற அந்த இரு போலீஸ்காரர்கள், நீதிபதி டர்மா ஃபிக்ரீ அபு அடாம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
அந்த இரு போலீஸ்காரர்களும், கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி, இரவு 10 மணியளவில், மலாக்கா, பிலாஸா வர்த்தகத் தளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில், இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தோனேசிய மாதுவுக்குச் சொந்தமான கைச்சங்கிலி, கடப்பிதழ் மற்றும் ஹொங் லியோங் வங்கியின் ஏ.டி.எம். அட்டை ஆகியவற்றை இரு போலீஸ்காரர்களும் களவாடியதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 395 பிரிவின் கீழ் அந்த இரு போலீஸ்காரர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


