May 1, 2026
Thisaigal NewsYouTube
இரு போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இரு போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

Share:

அந்நிய நாட்டைச் சேர்ந்த மாதுவை மடக்கி கொள்ளையடித்துடன், அவரின் கடப்பிதழைப் பறித்துக்கொண்டதாக லான்ஸ் காப்ரல் அந்தஸ்தைக் கொண்ட இரண்டு போலீஸ்காரர்களுக்கு எதிராக, மலாக்கா, ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

31 வயதுடைய தி.எஸ். பிரவின் மற்றும் முகமட் சஃப்ரி இட்ரீஸ் என்ற அந்த இரு போலீஸ்காரர்கள், நீதிபதி டர்மா ஃபிக்ரீ அபு அடாம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

அந்த இரு போலீஸ்காரர்களும், கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி, இரவு 10 மணியளவில், மலாக்கா, பிலாஸா வர்த்தகத் தளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில், இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தோனேசிய மாதுவுக்குச் சொந்தமான கைச்சங்கிலி, கடப்பிதழ் மற்றும் ஹொங் லியோங் வங்கியின் ஏ.டி.எம். அட்டை ஆகியவற்றை இரு போலீஸ்காரர்களும் களவாடியதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 395 பிரிவின் கீழ் அந்த இரு போலீஸ்காரர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி