டிரெய்லர் லோரி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து,சாலைத்தடுப்பில் மோதி, எதிரே சென்ற மேலும் ஒரு டிரெய்லர் லோரி மற்றும் ஒரு வாகனத்தை மோதித் தள்ளியதில் இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 317 ஆவது கிலோமீட்டரில் தாப்பா, சென்டெரியாங் அருகில் நிகழ்ந்தது. இதில் 31 வயதுடைய சிமெண்ட் லோரி ஓட்டுநர் மற்றும் தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த 67 வயதுடைய மற்றொரு டிரெய்லர் லோரி ஓட்டுநர் மரணம் அடைந்ததாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ செரி முஹமாட் யுஸ்ரி ஹஸ்ஸான் பஸ்ரி தெரிவித்தார். அதேவேளையில் இந்த விபத்தில் சிக்கிய மற்றொரு வாகனமோட்டியான மாது ஒருவர் , கடுமையான காயங்களுடன் தாப்பா மருத்துவமனையில் சேர்க்கப்ப்டடுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவ்விபத்தில் லோரி ஓட்டுநர்கள் இருவரும் கடும் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் மேலும் விவரித்தார்.

Related News

போலி மற்றும் மாற்று அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

கோலாலம்பூர் - கொச்சின் விமானத்தில் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி கைது

மின்சாரம் தாக்கி 3 போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்பு: முழுமையான விசாரணைக்கு அன்வார் உத்தரவு

மாநில அளவிலான BN-PN கூட்டணி கூட்டரசு அரசாங்கத்தைப் பாதிக்காது: ஃபஹ்மி ஃபாட்சில் உறுதி

மின்சாரம் தாக்கி மூன்று போலீஸ் அதிகாரிகள் பரிதாப மரணம்


