டிரெய்லர் லோரி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து,சாலைத்தடுப்பில் மோதி, எதிரே சென்ற மேலும் ஒரு டிரெய்லர் லோரி மற்றும் ஒரு வாகனத்தை மோதித் தள்ளியதில் இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 317 ஆவது கிலோமீட்டரில் தாப்பா, சென்டெரியாங் அருகில் நிகழ்ந்தது. இதில் 31 வயதுடைய சிமெண்ட் லோரி ஓட்டுநர் மற்றும் தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த 67 வயதுடைய மற்றொரு டிரெய்லர் லோரி ஓட்டுநர் மரணம் அடைந்ததாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ செரி முஹமாட் யுஸ்ரி ஹஸ்ஸான் பஸ்ரி தெரிவித்தார். அதேவேளையில் இந்த விபத்தில் சிக்கிய மற்றொரு வாகனமோட்டியான மாது ஒருவர் , கடுமையான காயங்களுடன் தாப்பா மருத்துவமனையில் சேர்க்கப்ப்டடுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவ்விபத்தில் லோரி ஓட்டுநர்கள் இருவரும் கடும் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் மேலும் விவரித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


