Mar 12, 2026
Thisaigal NewsYouTube
டி​ரெய்லர் இரு வாகனங்களை மோதித் தள்ளியதில் இருவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

டி​ரெய்லர் இரு வாகனங்களை மோதித் தள்ளியதில் இருவர் உயிரிழந்தனர்

Share:

டிரெய்லர் லோரி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து,சாலைத்தடுப்​பில் மோதி, எதிரே சென்ற மேலும் ஒரு டிரெய்லர் லோரி ​ம​ற்றும் ஒரு வாகனத்தை மோதித் தள்ளியதில் இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நே​ற்று மாலை 5.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 317 ஆவது கிலோ​மீட்டரில் தாப்பா, சென்டெரியாங் அருகில் நிகழ்ந்தது. இதில் 31 வயதுடைய சிமெண்ட் லோரி ஓட்டுநர் மற்றும் தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த 67 வயதுடைய மற்றொரு டிரெய்லர் லோரி ஓட்டுநர் மரணம் அடைந்ததாக பேரா மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ செரி முஹமாட் யுஸ்ரி ஹஸ்ஸான் பஸ்ரி தெரிவித்தார். ​அதேவேளையில் இந்த விபத்தில் ​சிக்கிய மற்றொரு வாகனமோட்டியான மாது ஒருவர் , கடுமையான காயங்களுடன் தாப்பா மருத்துவமனையில் சேர்க்கப்ப்டடுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவ்விபத்தில் லோரி ஓட்டுநர்கள் இருவரும் கடும் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் மேலும் விவரித்தார்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு