Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

2 மில்லியன் மதிப்புள்ள டிரேலர் உட்பட வரி செலுத்தாத 67 வகையான பொருட்கள் பறிமுதல்

Share:

ஜன 12

கூலிம் மாவட்ட BATALION 2 படையினர் நடத்திய சோதனையில், 8 இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள ஒரு டிரெய்லரோடு 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வரி செலுத்தாத 67 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையானது சுங்கைப்பட்டாணியில் உள்ள PETRONAS பெட்ரோல் நிலையத்தில் மதியம் 3.30 மணியளவில் நடத்தப்பட்டது. டிரெய்லரில் பல்வேறு வகையான வரி செலுத்தாத பொருட்கள் பெரிய பிளாஸ்டிக் பொட்டலங்களில் இருந்தன.

டிரெய்லர் ஓட்டுநர் பொருட்களுக்கான வரி செலுத்திய ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறியதால், அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு சுங்கைப்பட்டாணி சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. 49 வயது டிரெய்லர் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் உணவுப் பொட்டலங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், மோட்டார் சைக்கிள் பாகங்கள், துணிகள், காலணிகள் ஆகியவை அடங்கும். பொருட்களை ஏற்றி வந்த டிரெய்லரின் மதிப்பு 8 லட்சம் ரிங்கிட். மொத்த பறிமுதல் மதிப்பு 20 இலட்சத்து ஆயிரத்து 196 ரிங்கிட் ஆகும். இந்த சம்பவம் சுங்கத்துறை சட்டம் 1967 இன் பிரிவு 135(1)(D) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி