May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

2 மில்லியன் மதிப்புள்ள டிரேலர் உட்பட வரி செலுத்தாத 67 வகையான பொருட்கள் பறிமுதல்

Share:

ஜன 12

கூலிம் மாவட்ட BATALION 2 படையினர் நடத்திய சோதனையில், 8 இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள ஒரு டிரெய்லரோடு 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வரி செலுத்தாத 67 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையானது சுங்கைப்பட்டாணியில் உள்ள PETRONAS பெட்ரோல் நிலையத்தில் மதியம் 3.30 மணியளவில் நடத்தப்பட்டது. டிரெய்லரில் பல்வேறு வகையான வரி செலுத்தாத பொருட்கள் பெரிய பிளாஸ்டிக் பொட்டலங்களில் இருந்தன.

டிரெய்லர் ஓட்டுநர் பொருட்களுக்கான வரி செலுத்திய ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறியதால், அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு சுங்கைப்பட்டாணி சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. 49 வயது டிரெய்லர் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் உணவுப் பொட்டலங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், மோட்டார் சைக்கிள் பாகங்கள், துணிகள், காலணிகள் ஆகியவை அடங்கும். பொருட்களை ஏற்றி வந்த டிரெய்லரின் மதிப்பு 8 லட்சம் ரிங்கிட். மொத்த பறிமுதல் மதிப்பு 20 இலட்சத்து ஆயிரத்து 196 ரிங்கிட் ஆகும். இந்த சம்பவம் சுங்கத்துறை சட்டம் 1967 இன் பிரிவு 135(1)(D) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Related News

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு