May 24, 2026
Thisaigal NewsYouTube
சுபாங் விமான நிலையம் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து செயல்படும்
தற்போதைய செய்திகள்

சுபாங் விமான நிலையம் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து செயல்படும்

Share:

சுபாங் , ஜூலை 30-

கடந்த நான்கு ஆண்டு காலமாக பயணிகளுக்கான விமானச் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுபாங், சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையம் , வரும் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து மீண்டும் செயல்படவிருக்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

சுபாங் விமான நிலையம் மீண்டும் செயல்படுவது மூலம் அந்த விமான நிலையத்தின் வசதிகளை 6 முன்னணி விமான நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.

Firefly, AirAsia Malaysia, Batik Air Malaysia, Transnusa, SKS Airways மற்றும் Scoot ஆகிய 6 விமான நிறுவனங்கள் அன்றாடம் 9 விமானச் சேவைகளை மேற்கொள்ளும். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு விமானம் சேவையில் ஈடுபடும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

முன்னதான சுபாங் விமான நிலையத்திற்கு வருகை புரிந்த அமைச்சர் அந்தோணி லோக், அங்கு நடைபெற்று வரும் சீரமைப்புப்பணிகளை பார்வையிட்டார்.

Related News

சுபாங் விமான நிலையம் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து செயல்படும் | Thisaigal News