Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் மாநகருக்கு புதிய டத்தோ பண்டார் நியமனம்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் மாநகருக்கு புதிய டத்தோ பண்டார் நியமனம்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.14-

புத்ராஜெயா கழகத்தின் முன்னாள் தலைவர் ஃபாட்லுன் மாக் உஜுட், கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் புதிய டத்தோ பண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனத்திற்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

ஃபாட்லுன் மாக் உஜுட், பதவிக் காலம் நாளை சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி தனது பதவி காலத்தை நிறைவு செய்யவிருந்த கோலாலம்பூர் டத்தோ பண்டார் மைமூனா ஷாரிஃப், முன்கூட்டியே தனது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டதைத் தொடர்ந்து அப்பதவிக்கு ஃபாட்லுன் மாக் உஜுட் நியமிக்கப்பட்டுள்ளார்.

58 வயதான ஃபாட்லுன் மாக் உஜுட், நகர் மற்றும் புறநகர் திட்டமிடல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர் ஆவார். கூட்டரசு மேம்பாடு மற்றும் மாநகர நிர்வாகம் ஆகிய துறைகளில் 28 ஆண்டு காலம் அனுபவத்தை அவர் கொண்டுள்ளார்.

புத்ராஜெயா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமல்படுத்தியதில் மிகச் சிறப்பாக தலைமைத்துவ அடைவு நிலையை ஃபாட்லுன் மாக் உஜுட் கொண்டுள்ளார் என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தஃபா தெரிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு