Nov 14, 2025
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் மாநகருக்கு புதிய டத்தோ பண்டார் நியமனம்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் மாநகருக்கு புதிய டத்தோ பண்டார் நியமனம்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.14-

புத்ராஜெயா கழகத்தின் முன்னாள் தலைவர் ஃபாட்லுன் மாக் உஜுட், கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் புதிய டத்தோ பண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனத்திற்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

ஃபாட்லுன் மாக் உஜுட், பதவிக் காலம் நாளை சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி தனது பதவி காலத்தை நிறைவு செய்யவிருந்த கோலாலம்பூர் டத்தோ பண்டார் மைமூனா ஷாரிஃப், முன்கூட்டியே தனது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டதைத் தொடர்ந்து அப்பதவிக்கு ஃபாட்லுன் மாக் உஜுட் நியமிக்கப்பட்டுள்ளார்.

58 வயதான ஃபாட்லுன் மாக் உஜுட், நகர் மற்றும் புறநகர் திட்டமிடல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர் ஆவார். கூட்டரசு மேம்பாடு மற்றும் மாநகர நிர்வாகம் ஆகிய துறைகளில் 28 ஆண்டு காலம் அனுபவத்தை அவர் கொண்டுள்ளார்.

புத்ராஜெயா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமல்படுத்தியதில் மிகச் சிறப்பாக தலைமைத்துவ அடைவு நிலையை ஃபாட்லுன் மாக் உஜுட் கொண்டுள்ளார் என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தஃபா தெரிவித்தார்.

Related News

கெடா மாநில ஆதாரமில்லா உரிமைக் கோரல்: பினாங்கு கூட்டரசு அரசியலமைப்பால் பாதுகாக்கப்படும் - குமரன் கிருஷ்ணன்

கெடா மாநில ஆதாரமில்லா உரிமைக் கோரல்: பினாங்கு கூட்டரசு அரசியலமைப்பால் பாதுகாக்கப்படும் - குமரன் கிருஷ்ணன்

பினாங்கு கடலடிச் சுரங்கப் பாதைத் திட்டம் ரத்து செய்யப்படவில்லை

பினாங்கு கடலடிச் சுரங்கப் பாதைத் திட்டம் ரத்து செய்யப்படவில்லை

பாதுகாவலர் சந்திரன் மரணம்: சவப் பரிசோதனை அறிக்கைக்காகப் போலீஸ் காத்திருக்கிறது

பாதுகாவலர் சந்திரன் மரணம்: சவப் பரிசோதனை அறிக்கைக்காகப் போலீஸ் காத்திருக்கிறது

எண்ணெய் நிலையத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்: மூவர் கைது

எண்ணெய் நிலையத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்: மூவர் கைது

கம்போங் பாப்பான் வீடுகள் உடைப்பை எதிர்த்த 14 பேர் விசாரணைக்குப் பிறகு போலீஸ் ஜாமீனில் விடுவிப்பு

கம்போங் பாப்பான் வீடுகள் உடைப்பை எதிர்த்த 14 பேர் விசாரணைக்குப் பிறகு போலீஸ் ஜாமீனில் விடுவிப்பு

மலேசியத் தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு விரைவில் மலேசியக் குடியுரிமை - உள்துறை அமைச்சர் தகவல்!

மலேசியத் தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு விரைவில் மலேசியக் குடியுரிமை - உள்துறை அமைச்சர் தகவல்!