கூச்சிங், ஜூலை.11-
தனியார் நிறுவனத்தில் ஓய்வு பெற்ற 60 வயதுடைய நபர் ஒருவர், இணைய வழி போலி பங்கு முதலீட்டு மோசடியில் சிக்கி 2 லட்சம் ரிங்கிட்டை இழந்தார்.
பாதிக்கப்பட்டவர், கடந்த மே மாதம் சமூக ஊடகத் தளமான முகநூலைப் பார்வையிட்டதாகவும், அதில் இடம் பெற்றப் பங்கு முதலீட்டு விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டதாகவும் மிரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா கூறினார்.
பாதிக்கப்பட்டவர் சந்தேக நபரால் வழங்கப்பட்ட இரண்டு வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் கட்டம் கட்டமாக ஐந்து பணப் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.








