May 18, 2026
Thisaigal NewsYouTube
ஜுலை முதல் தேதியிலிருந்து ஹோட்டல் கட்டணங்கள் விலை உயரலாம்
தற்போதைய செய்திகள்

ஜுலை முதல் தேதியிலிருந்து ஹோட்டல் கட்டணங்கள் விலை உயரலாம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.28-

வரும் ஜுலை முதல் தேதியிலிருந்து ஹோட்டல் கட்டணங்கள் விலை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜுலை மாதத்திலிருந்து மின்சார விநியோகத்திற்கான புதிய கட்டணம் அறிமுகம் மற்றும் எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை, சேவை வரி அமலாக்கத்தினால் ஹோட்டல் துறையினர் மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் ஹோட்டல் கட்டணத்தின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் எஸ்எஸ்டி வரி ஆகியவற்றினால் ஹோட்டல் பராமரிப்பு செலவினம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில ஹோட்டல் நடத்துநர்கள் சங்கத்தின் தலைவர் ஹாஸிஸ் ஹசான் தெரிவித்தார்.

தொழிலாளர்களுக்கு அண்மையில்தான் குறைந்தபட்ச சம்பளம் 1,700 ரிங்கிட்டாக ஹோட்டல் துறையினர் உயர்த்தியுள்ள வேளையில் தற்போது மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் எஸ்எஸ்டி வரி தங்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனைச் சமாளிக்க ஹோட்டல் கட்டண விலையை உயர்த்துவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்று அவர் கூறுகிறார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி