Feb 28, 2026
Thisaigal NewsYouTube
பெட்டாலிங் ஜெயாவில் போக்குவரத்திற்கு எதிர்த் திசையில் காரைச் செலுத்தி பரபரப்பை ஏற்படுத்திய நபர் கைது
தற்போதைய செய்திகள்

பெட்டாலிங் ஜெயாவில் போக்குவரத்திற்கு எதிர்த் திசையில் காரைச் செலுத்தி பரபரப்பை ஏற்படுத்திய நபர் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி.28-

பெட்டாலிங் ஜெயாவில் நேற்று போக்குவரத்திற்கு எதிர்த் திசையில் தமது காரைச் செலுத்தி, வாகனங்களுடன் விபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று காலை 11.28 மணியளவில், ஜாலான் டத்தோ அபு பாக்கார் 16/1 சாலையில் நடந்த இச்சம்பவத்தின் போது, சிவப்பு நிற ஹாண்டா சிஆர்வி காரை போக்குவரத்திற்கு எதிர்த் திசையில் செலுத்திய அந்நபர், அவ்வழியே வந்த பல வாகனங்களுடன் விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இருப்பினும், இச்சம்பவத்தில் விபத்திற்குள்ளான வாகனங்களில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

இந்நிலையில், அந்த சிவப்பு நிற ஹாண்டா சிஆர்சி காரைச் செலுத்திய உள்ளூர் ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஷம்சுடின் பின் மாமாட் தெரிவித்துள்ளார்.

1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1)-ன் கீழ், அந்நபர் மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளதாகவும் ஷம்சுடின் குறிப்பிட்டுள்ளார்.

Related News

குண்டாங் ஏரி விபத்தில் 3 உயிர்களைக் காத்த 7 இளைஞர்களுடன் பிரதமர் நேரில் சந்திப்பு: வீர செயல்களைப் பாராட்டி வெகுமதிகளை வழங்கினார்

குண்டாங் ஏரி விபத்தில் 3 உயிர்களைக் காத்த 7 இளைஞர்களுடன் பிரதமர் நேரில் சந்திப்பு: வீர செயல்களைப் பாராட்டி வெகுமதிகளை வழங்கினார்

2028-ஆம் ஆண்டிற்குள் கிளானா ஜெயா என எல்ஆர்டி ரயில் சேவையில் 26 புதிய ரயில்கள்: போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவிப்பு

2028-ஆம் ஆண்டிற்குள் கிளானா ஜெயா என எல்ஆர்டி ரயில் சேவையில் 26 புதிய ரயில்கள்: போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவிப்பு

புக்கிட் பெருந்தோங்கில் பெண்ணிடம் நகை கொள்ளை முயற்சி: இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

புக்கிட் பெருந்தோங்கில் பெண்ணிடம் நகை கொள்ளை முயற்சி: இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் அரண்மனை சார்பில் 2000 பொதிகள் நோன்புக் கஞ்சி விநியோகம்

ஜோகூர் அரண்மனை சார்பில் 2000 பொதிகள் நோன்புக் கஞ்சி விநியோகம்

நீலாய் வெடிப்புச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 63 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

நீலாய் வெடிப்புச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 63 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

ரவூப் தீ விபத்து: 5 குடும்ப உறுப்பினர்களை இழந்த அக்கா, தம்பிக்கு ஸாஹிட் ஆறுதல்

ரவூப் தீ விபத்து: 5 குடும்ப உறுப்பினர்களை இழந்த அக்கா, தம்பிக்கு ஸாஹிட் ஆறுதல்