மக்களவைக் கூட்டம் நடைபெறும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நாட்டின் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும், எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்சா ஜைனுதீனும், வாராந்திர விவாதத்தில் பங்கேற்க வேண்டுமென்று முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் பரிந்துரைச் செய்துள்ளார்.
நாடாளுமன்றம் / பொது விவாத மேடையாக மாறும் போது எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் ஹம்சா ஜைனுதீன், அரசாங்க நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதில் முக்கிய பங்காற்ற முடியும் என்று அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரான கைரி ஜமாலுதீன் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் என்பது வெறும் கேள்விப் பதில் மேடையாக மட்டுமல்லாமல், நாடு மற்றும் மக்களின் மேன்மைக்கு ஆக்கப்பூர்வமான விஷயங்களை அரசாங்கத் தரப்பிலும், எதிர்கட்சித் தரப்பிலும் விவாதிக்கக்கூடிய களமாக மாற வேண்டும் என்று கைரி ஜமாலுதீன் கேட்டுக்கொண்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


